ஓலை: 61
தவமிருந்து பெற்ற திருமகனார் திருமாளிகைத் தேவர்
தொண்ணூற்றாறாவதாண்டு நிலவுக் கண்டம்
ஏகிய பின்னும் தமிழினம் காத்தார்
தந்தை பெற்ற வருத்தமே அரச குடும்பத்தாரால்
தமக்கும் வந்தது கண்டே வருந்தி
வட இமயம் நாடினார் தவத்துக்கே
இவர் வழிவந்தோர் ‘தமிழ் விடுதூது’ பாடியே
அரற்றிப் புலம்பி அன்னைத் தமிழின் பெருமை
அறிவிக்க முயன்றார்
ஓலை: 62
அனைத்துலகச் சமயங்களும், சாதிகளும் இனங்களும்
மொழிகளும் இமயம் புகுந்து வந்தே ஆட்சி பெற்றன
தினையளவு வேற்று மொழியோ இனமோ அற்ற
தென்குமரி வட இமயத்திடை பரந்த பாரத நாடு சிதைந்தது.
ஓலை: 63
வினையான பிரிவுகள் வேறான பேர்கள் முரணான
சண்டைகள் முடிவுறாத கலகங்கள் மூண்டு கொண்டே உள்ளன
நினைப்பால் எல்லோரையும் ஒருங்கிணைத்து
பாரதத்தின் நீண்ட புகழை மீண்டும்
நிலைநாட்ட அனைவருமே விரும்புகின்றனர்.
ஓலை: 64
நீண்டு விரிந்து கிடக்கும் பாரதம் அருளாட்சி பெற
மீண்டும் பாரதப் போர் தெரு தோறும்
நிகழ்த்திட அருளரசன் யோகி வரணும்
நல்லிலக்கண இயல்புகளால் சமுதாய மாற்றமும்
அரசியல் மாற்றமும் இணைத்துப் பிணைத்து
நிகழ்த்தத் திருவும் குருவும் ஒருவராய் வரவேண்டும்
ஓலை: 65
இவ்விலக்கணமும் சமய சமுதாய அரசியல்
பொருளிலக்கணமும் புரிந்த அருளுள்ளம் எழுச்சியை
கிளர்ச்சியைத் தலைமை யேற்க வேண்டும்
அல்லவை அகற்றி நல்லவை விளைத்திட அருள் வல்லமையும்
சித்தித் திறமுடைய தவத்தோர் தலைமையில் புரட்சி வேண்டும்
ஓலை: 66
வரட்சி யெல்லாம் வீழ்ச்சியுற்றுத் தாழ்ச்சி நீங்கச்
சூழ்ச்சி மிகு பெருவீரன் மீட்சிப் பணியோடு
ஆட்சி புரிய வர வேண்டும்
மிரட்சி யெல்லாம் திரட்சி பெற்று ஒருமுகமாய்
அழிந்தொழிய அருளாட்சியே வழிகாணும்
இருளகற்றி ஒளி பரப்பிடும்.
ஓலை: 67
பொருளுலகக் குறைகளும் கறைகளும் கடுமைகளும்
கொடுமைகளும் ஒழிய அருளாட்சி மலர வேண்டும்
அருளாட்சி மலர மண்ணுலக மதங்களனைத்தும் ஈன்ற
விண்ணுலகத் தத்துவமாம் இந்துமதம் மலர வேண்டும்
ஓலை: 68
இருளற்ற சமத்துவச் சகோதரத்துவப் பொதுவுடமைக்
கூட்டுறவுச் சமுதாயம் அமைக்க
இந்துமத வழி இயக்கமே திருவழி
உருவாகும் இந்துமத இயக்கம் மறுமலர்ச்சிப்
பணியில் இந்த மானுடர் எல்லோரும்
இணைந்தாலே வழியுண்டு இனி
ஓலை: 69
அருட்பணிகள் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தால்
சித்தர் நெறிக் கலைகளாலும் ஞானங்களாலும் விரைவாக விரிவாகும்
கருவாகச் சித்தர் நெறியும் கன்னித் தமிழும் ஏற்காமல்
எந்த மானுடம் இந்த மானுடம் என்ற பழி வரலாகாது இனியும்
ஓலை: 70
அருளால் மருளால் திருவாக்காக குருவாக்காகப்
பிறணவங்கள் பிறமாணங்கள் மீமாம்சைகள்
வேதங்கள் நிடதங்கள் உபநிடதங்கள் என நாற்பத்தெட்டு
அருளாட்சிக் கருவாகப் பிறணவங்கள்
பிறமாணங்கள் நிடதங்கள் உபநிடதங்கள்
காயந்திரிகள் மீமாம்சைகள் ஆகமங்கள்
என வரும் நாற்பத்தெட்டும் எழுந்தனவே
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.