ஓலை: 21
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
ஓலை: 22
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.
ஓலை: 23
கண்ணில் கன்னித்தமிழ் கொண்டு காத்தனர்
விண்ணில் பிறக்கும் ஒலிகளை எழுத்தாக்கினர்
மண்ணில் அருட்பயிர் தழைக்க இலக்கியங்கள் செய்தனர்
மானுடர் வாழ்வு கூனும்குருடும்முடமும் பெறாதிருக்கக் கலைகள் படைத்தனர்
ஏனிடர் எந்தமிழர்க்கு எல்லாம் தமிழால் முடியும்.
ஓலை: 24
விண்ணகத்து மாந்தர்களை விந்தையால் கொணர்ந்து வேண்டுமிடத்து
மண்ணகத்து நாளோலக்கம் புரியச் செய்து மானுடர்
கண்ணகத்துக் காட்டி நிலையான கலைக்கோயிலும் கட்டினரிவர்.
ஓலை: 25
வண்ணத் தமிழால் உருவ அருவ அருவுருவப் பெரியாரெல்லாம் தொழுக
தன்னகத்தே வானகத்தைக் கண்டு போனகத்தைப் புரிந்து உய்க
முன்னகத்தை விண்ணகமாக்கி வித்தையாக்கும் வேந்தர் சித்தர்களே என உணர்ந்தால்
ஓலை: 26
உன்னகத்தை உய்வுறுத்தி உயர்த்தி ஒளியாக்கி நிலையாக்கிடு
வண்டமிழர் வாழ்வெல்லாம் வகைவகையாக வாகை சூடிட வழிகள் செய்தார்
மண்டலமாண்ட வைகையாற்றங்கரைக் கருவூறார் வல்லமை பலவற்றால்
அண்டபேரண்டங்களும் தெய்வத் தமிழால் ஆட்சி செய்யவே வழிகண்டார்.
ஓலை: 27
விண்டுரைத்த வித்தைகளைத் தமிழர் வீணாக்கி
வேதனையாக்கியே வருத்தினர்
பண்டு நினைத்தவை பாழாயின கண்டே
பகலென உடலோடு பரம்பொருளானாரே
கதையானது வைகை யாற்றங்கரைக்
கருவூறாரின் வாகான செயலெல்லாம்
விதையாக இருந்த தத்துவங்கள் வேதாகம
விளைவுகளால் முளைத்தன.
ஓலை: 28
அதையறுவடை செய்யவே அமராவதியாற்றங்கரைக் கருவூறார் தோன்றினார்
கடல் விழுங்கிய சங்கங்கள் வளர்த்த செல்வமெல்லாம் காத்திட்டார்
கன்னித் தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையும் பற்றும் போற்றி வைத்தார்
மக்கள் மலர்ச்சியே மாக்கடலில் மாண்டனவற்றின் மறுமலர்ச்சி.
ஓலை: 29
சமுதாயப் புரட்சியே சங்கத் தமிழ் வளர்ச்சி செழுச்சி
சங்கத் தமிழ் வளர்ச்சியே செழுச்சியே தமிழின எழுச்சி! மீட்சி! ஆட்சி!
தமிழின எழுச்சியே மீட்சியே ஆட்சியே மானுட மலர்ச்சி செழுச்சி
ஆக்கக் கொள்கை இவையென அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் ஆற்றினார் பணிகள் பல.
ஓலை: 30
பாக்கள் பழையன புதியன தொகுத்துப் பகுக்கப்பட்டன
புராண இதிகாசங்கள் காப்பியங்கள் கதைகள் ஏடுபெயர்த்தெழுதப் பட்டன
இலக்கணங்கள் இசைநூல்கள் நிகண்டுகள் நாரைகள் குருகுகள் ஆராயப்பட்டன.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.