1. பதினெண் சித்தர்களின் வாழ்வியல் நெறியான ‘சித்தர் நெறி’யே இந்துமதம். இதில் கலந்து விட்ட மூடநம்பிக்கைகள், மடமைகள், கற்பனைகள்.... முதலியவற்றை பயிற்சிகள் தருவதன் மூலம் அகற்றுவதே நோக்கம்.
2. உலக மதங்களுக்கு சித்தர் நெறியே தாய்! எனவே, அவரவர் தத்தம் மதவழி வழிபட அநுபவப் பூர்வமான வழிபாட்டு முறைகளைக் கற்றுத் தருதலே நோக்கம்.
3. அமைதியுடன், அன்புடன், நிறைவுடன், நிம்மதியுடன் இல்லறம் இனிது அமைய உதவும் ஆன்மீக உணர்வுகளை சித்தர் நெறி மூலம் வளர்க்கப் பாடுபடுவதே நோக்கம்.
4. சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் மற்றும் உலக ஆன்மநேய ஒருமைப்பாடு முதலியவற்றை உருவாக்குவதே நோக்கம்.
5. சித்தர்களின் ஓகாசன, யோகாசன பயிற்சி மூலம் உடல், உயிர், ஆவி, ஆன்மா முதலியவைகளை வளமாக்குதலும், வலிமையாக்குதலும் நோக்கமாகும்.
6. மருத்துவ உலகில் தெரியாமை, புரியாமை, அறியாமை, புதிர்.... முதலியவை இருப்பதை முற்றிலும் மாற்றிடச் சித்தர்களின் மருத்துவக் கொள்கைகளை அனைவருக்கும் வழங்குதலே நோக்கம்.
7. மனித சமுதாய வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள், மாறுபாடுகள், முரண்பாடுகள், குறைபாடுகள், பற்றாக்குறைகள், இயலாமைகள், வறுமைகள், தேக்கங்கள், வீக்கங்கள், முடக்கங்கள்... முதலிய அனைத்தையும் முற்றிலும் அகற்றிடச் சித்தர்களின் செய்திச் செழுமையிலும், கண்ணோட்டத்திலும், உலக வரலாறு, இலக்கியம், கலை, தொழில் முதலிய அனைத்துத் துறைகளையும் புதுப்பித்து எழுதுதலே நோக்கம்.
8. மானுட நலப் பாதிப்புகள், ஊழ்வினை, சூழ்வினை, ஆள்வினை, பாரம்பரியம், நாள், கோள், மீன், இராசி, காற்று, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, கண்ணேறு.... முதலியவைகளின் ஆட்சியால் விளைகின்றன என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் நலம் விளைவிக்க அருட்பணி விரிவாக்கத் திட்ட யாகசாலைகள் மூலம் முயலுதலே நோக்கம்.
9. மதம், மொழி, இனம், சாதி, வட்டாரம், கட்சி முதலியவைகளின் பெயரால் நிகழுகின்ற சர்வாதிகாரங்களையும், சுரண்டல்களையும், ஏமாற்றுக்களையும், அடிமை நிலைகளையும்... முழுமையாக அகற்றுதலே நோக்கம்.
10. நாத்திகத்தாலும், மதமறுப்பாலும், வெறுப்பாலும், பண்பாட்டுத் துரோகத்தாலும், இன விரோதத்தாலும், தாய்மொழிப் பற்றின்மையாலும், நாட்டுப் பற்றின்மையாலும் ஏற்பட்டுவிட்ட இகழ்ச்சிகளை, தாழ்ச்சிகளை, வீழ்ச்சிகளை, இழப்புக்களை ஈடு செய்வதே நோக்கம்.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.