சோதிடம், பிறப்பியல், மனையியல், அங்கவியல், கைரேகை, பஞ்சாங்கம், பூசை, தவம், மந்திரம் .... முதலியவை மனித மனத்துக்கு நிறைவையும், சிந்தைக்குத் தெளிவையும், உணர்வுக்கு அமைதியையும், செயலுக்கு உறுதியையும், எண்ணத்துக்கு உரத்தையும், வாழ்வுக்குக் கவர்ச்சியையும் நல்கிடும்! நல்கிடும்! நல்கிடும்! வேறு எதனாலும் இவற்றைப் பெற முடியாது, விலை கொடுத்து வாங்க முடியாது.
அருளூற்றாகிடும் சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும் மக்களின் தாகங்களைத் தீர்க்கவும்; புறத் தூய்மையைச் சிறக்கச் செய்யவும், அன்பும், அமைதியும், பொறுமையும், நிறைவும், அழகும், மென்மையும், நளினமும், நாகரீகமும், சுத்தமும், ..... மனித வாழ்வில் சிறக்கவும் உழைப்பார்கள்.
சித்தர்கள் மந்திரவாதிகள் அல்லர், இறைமையின் இருப்பிடங்களே சித்தர்கள். மனித சமுதாயம் ஒற்றுமையோடும், பற்றோடும், பாசத்தோடும், உறவுமுறைகளோடும், உரிமைகளோடும் அமைதியாக வாழ வழியமைத்தவர்களே சித்தர்கள்.
சாத்திரங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், முறைகள், நெறிகள், ஒழுகலாறுகள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், ....... முதலியவைகளை உருவாக்கிய சித்தர்களின் அடியான்களும், அடியார்களும் 'பொதுவுடமை', 'சமத்துவம்', 'சகோதரத்துவம்', 'மனிதாபிமானம்', 'அன்புநெறி', 'அமைதி', ........ முதலியவை செழிக்கவே பாடுபடுவார்கள். சித்தர் நெறியே பகுத்தறிவு வளர்த்து அகவாழ்வுக்குரிய மெய்ஞ்ஞானத்தையும், புறவாழ்வுக்குரிய விஞ்ஞானத்தையும் செழிப்படையச் செய்யக்கூடிய ஒன்று.
அனைவரும் வருக! அறிவும் அருளும் பெறுக!
“.... மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ....
"... மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ..."
"... இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், ..."